Gjør som tusenvis av andre bokelskere
Abonner på vårt nyhetsbrev og få rabatter og inspirasjon til din neste leseopplevelse.
Ved å abonnere godtar du vår personvernerklæring.Du kan når som helst melde deg av våre nyhetsbrev.
108 ஜி +1 வீட்டுத் திட்ட வடிவமைப்புகள் வாஸ்து சாஸ்திர முறைப்படி அமைத்து வழங்கப்பட்டுள்ளது. அழகான வீட்டுத் திட்டங்களின் 108 பல்வேறு நிலப்பரப்புகளை இது கொண்டுள்ளது. இந்த புத்தகம் கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு திசைகளின் வீட்டுத் திட்ட வடிவமைப்பை உள்ளடக்கியது. ஒவ்வொரு திசையிலும் இடம்பெறும் 27 வெவ்வேறு நில அளவிலான வீட்டுத் திட்டங்கள் உள்ளன. இந்த புத்தகத்தில் 484 சதுர அடி முதல் 2400 சதுர அடி வரை வீடு திட்டங்கள் உள்ளன. இந்த வீட்டுத் திட்ட புத்தகம் தங்கள் கனவு வீடு கட்ட வீட்டுத் திட்டங்களைத் தேடும் மக்களுக்கு, சிவில், கட்டமைப்பு பொறியாளர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள், சிவில், கட்டிடக்கலை மற்றும் உள்துறை வடிவமைப்பு மாணவர்களைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவர்கள் இந்த புத்தகத்தை ஒரு குறிப்பாகவும் பயன்படுத்தலாம்.
இலக்கியம் என்பது மக்கள் சமூகத்தை உள்ளடக்கியது. வடிவங்கள், அமைப்பு முறைகள், உத்திகள், பாடுபொருள்கள், அழகியல் தன்மைகள் என்று காலந்தோறும் மாற்றங்களுக்கு உள்ளாகிக் கொண்டே வந்தாலும், அவை அனைத்தும் அந்தந்தக் கால மக்கள் சமூகத்தின் வாழ்வியலை மையமாகக் கொண்டே அமைந்தன. மக்கள் வாழ்வியலின் பன்முகப் பரிமாணங்களை உள்ளடக்கிக் கொண்டு, மக்கள் வாழ்வியலில் நல்ல மாற்றங்களை உருவாக்கி வாழ்தரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளைத் தான் எல்லா நல்ல இலக்கியங்களும் நோக்கங்களாகக் கொண்டுள்ளன. இத்தகைய சிறப்பு வாய்ந்த இலக்கியங்களின் வளர்ச்சிக் கூறுகளில் ஒன்றாக இடம் பெறுவது பழந்தமிழ் இலக்கியங்களின் மீதான மறுபடைப்புகள் ஆகும். "வாழ்ந்து, பின் இழந்து போன உலகம் பொன்னுலகம், இடையில் வந்து சேர்ந்தது ஓர் இருள் உலகம்; பொன்னுலகம் மீட்டினால், வரும் ஒரு புது உலகம்" என்ற சிந்தனையையும், நம்பிக்கையையும் குறிப்பது "மீட்டுருவாக்கம்" என்ற கருத்தியலாகும். மனித குல வரலாற்றில் மீட்டெடுப்புகளுக்கானச் சிந்தனைச் சமூக மேம்பாட்டிற்கான ஒரு வாயிலாகவும், ஒரு உந்துதலாகவும் அமைகிறது. அவ்வரிசையில், தமிழின் ஒப்பற்றக் காப்பியமாகத் திகழும் சிலப்பதிகாரத்தினைக் கவிஞர் பா.விஜய் 'காற்சிலம்பு ஓசையிலே' என்னும் பெயரில் புதுக்கவிதை வடிவில் மறுபடைப்பாக்கம் செய்துள்ளார். இதில் கவிஞர் பா.விஜய் கையாண்டுள்ள உத்திமுறைகள், பொருண்மை மாற்றங்கள், சமகாலச் சிந்தனைகள் ஆகியவற்றை மதிப்பீடு செய்யும் வகையில் இந்நூல் அமைகிறது
Abonner på vårt nyhetsbrev og få rabatter og inspirasjon til din neste leseopplevelse.
Ved å abonnere godtar du vår personvernerklæring.